Mon. Jul 8th, 2024

ஈபிஎஸ் சந்தேகத்திற்கு ரொம்ப நெருக்கமானவர் – மா.சுப்பிரமணியன் தாக்கு

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈபிஎஸ் சந்தேகத்திற்கு ரொம்ப நெருக்கமானவர் என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் மருந்து தட்டுப்பாடு இல்லை. ரூ.240.90 கோடி மதிப்பிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அவசர கால மருந்துகள் வாங்க ரூ.402.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

32 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் உள்ளன. எஞ்சிய இடங்களில் கிடங்கு அமைக்கப்படுகிறது. சந்தேகத்திற்கு நெருக்கமானவர் எடப்பாடி பழனிச்சாமி.