சூரியன் மேற்கே உதித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது – அமைச்சர் சேகர் பாபு
சூரியன் மேற்கே உதித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் எத்தனை ED, IT ரெய்டுகள் நடத்தினாலும் சரி, எத்தனை குட்டிக் கரணங்கள் அடித்தாலும் சரி, பாஜக ஆட்சிக்கு வர முடியாது. சூரியன் மேற்கே உதித்தாலும் அது நடக்காது.
தமிழ்நாடு திராவிட மண், பாஜகவுக்கு அதிகாரத்தில் அமர்த்தும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.