மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து – 10 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமங்காவ்ன் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் மற்றும் லாரி மோதியதில் மருத்துவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இரண்டாவது சம்பவத்தில், 40-45 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து, அஷ்தி ஜாம்கேட் சாலையில் உள்ள காந்தன்வாடி பாடா அருகே கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.