Sun. Oct 6th, 2024

புதுக்கோட்டையில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்திய இலவச மருத்துவ முகாம்!

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உதடுஉள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உதடு/உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது

முகாமிற்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் K.H.சலீம் வழிகாட்டுதலின்படி, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் A.ஆரோக்கிய ஜெஸ்டின் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக முக அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சௌமியா திரிபாதி மற்றும் டாக்டர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உதடுஉள் அண்ணப் பிளவு என்பது நோய் அல்ல முற்றிலும் குணப்படுத்தக் கூடியது, ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்து முறையான அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மற்றவர்களைப் போல் இயல்பான முகத்தைப் பெற வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மேலும் தி ஸ்மைல் டிரெய்ன் உதடு/உள் அண்ணப்பிளவு சீரமைப்பு மண்டல மையம் மூலமாக 14000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக சிறந்த முறையில் செய்யப்பட்டது என எடுத்துக் கூறினார்.

உடன் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் R.ஜெயக்குமார், மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் ஜான்ஹென்ரி, அஜீஸ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரோட்டரி கிரவுன்சிட்டி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இம்முகாமில் உதடு அண்ணம் பிளவு பட்ட குழந்தைகள் மற்றும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மறு ஆய்வு செய்து கொண்டு பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் T.ஜோசப் செய்திருந்தார். முடிவில் திட்ட இயக்குநர் A.ராஜா  இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அமானுல்லா,
புதுக்கோட்டை