Sun. Oct 6th, 2024

ரவுடியை கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த | மூன்று சகோதரர்களும் | 3 மணி நேரத்தில் கைது |

பிரபல ரவுடி கொலையில் மூன்று மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேலையூர் சுடுகாட்டில் 22 ஆம் தேதியன்று காலை 7-மணியளவில் சடலம் ஒன்று எரித்தும் எரியாத நிலையிலும் கிடந்ததை கண்ட மேலையூர் கிராம மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்த, திருப்போரூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது. மேலையூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ் என்பதும், அவர் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் தெரியவர, சதீஷூடன் நெருங்கி பழகிய நண்பர்கள் அவரது குடும்பத்தினர்கள், உட்பட அனைவரிடமும் போலீசாரின் விசாரணை நீண்டு கொண்டே சென்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சதீஷூடன் சுற்றி திரிந்த மூன்று சகோதரர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தது, கொலை செய்யப்பட்ட சதீஷ் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் என்று பல வழக்குகள் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும். கடந்த 2019ம் ஆண்டு கூடுவாஞ்சேரி அருகே பெட்டிக் கடைக்காரர் ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது மனைவி ஷியாமலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் சதீஷ், அடுத்ததாக சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவரின் மனைவியை இரண்டாவதாக திருமணம் செய்தும், மூன்றாவதாக பட்டாபிராமை பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரையும் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே மதுராந்தகம் அடுத்த அருங்குன்றத்தை சேர்ந்த பிரசாந்த் (எ) பட்டாபிராமன் (22) என்பவர் தனது தாய்க்கு சொந்தமான சிறுதாவூரில் உள்ள நிலத்தை விற்பதற்கு ரவுடி சதீஷை அணுக பிரசாந்த் நிலத்தை விற்பதற்கு ஆதரவாக இருப்பதாக சதீஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் அருங்குன்றத்தில் இருந்தால் நிலத்தை விற்க முடியாது எனவும் அதனால் மேலையூரில் உள்ள தனது வீட்டிற்கு வாடகைக்கு வருமாறு சதீஷ் கூற அவரது பேச்சைக் கேட்ட பிரசாந்த் அவரது 20 வயது மனைவி, சகோதரர்களான பரத் மற்றும் சிறுவனை (17) அழைத்து கொண்டு மேலையூர் உள்ள சதீஷின் வீட்டிற்கு வாடகைக்கு சென்றுள்ளனர்.

பிரசாந்தின் மனைவியிடம் சதீஷ் தவறாக நடக்க முயன்றதை அவர் கூற இதனை கேட்டு ஆத்திரமடைந்த பிரசாந்த் தனது சகோதரரான பரத் மற்றும் சிறுவன் உட்பட மூவரும் சதீஷை கொலை செய்வதற்கு மேலையூரில் உள்ள சதீஷ் வீட்டிற்கு பிரசாந்த், பரத், சிறுவன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மேலையூர் சுடுகாடு அருகே வரும்போது சகோதரர்கள் மூவரும் சேர்ந்து கத்தியை எடுத்து சதீஷின் வயிற்றில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடங்காத மூவரும் சதிஷின் உடலை காரோடு மண்ணென்னெய் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் கார் எரியாமல் போகவே அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மூவரும் சதீஷை இழுத்து வந்து மேலையூர் சுடுகாட்டுக்கு அருகே வீசி சென்றதாக ஒப்புக்கொண்டனர்.

அவர்களை கைது செய்த திருப்போரூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தாக தகவல் தெரிவிக்கின்றனர்.