Mon. Oct 7th, 2024

MGR நகரில் கைக்குழந்தையை | அடித்து கொன்ற தந்தை கைது |

MGR நகரில் கைக்குழந்தையை | அடித்து கொன்ற தந்தை கைது |

சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசை பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் (27). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா இவர்களுக்கு இரண்டரை மாதமான ராஜமாதா என்கிற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன் அவர் மனைவி துர்காவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தை அழுததால் துர்கா கணவரிடம் இருந்து விலகி சென்று தனது குழந்தையை தூக்கி மடியில் வைத்து பால் கொடுத்து கொண்டு இருந்தார். மனைவி தன்னிடமிருந்து விலகி சென்றதால் ஆத்திரம் அடைந்த எல்லப்பன் மனைவி மடியில்‌ இருந்த குழந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அப்போது இதை சற்றும் எதிர்பாராத துர்கா தனது கணவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையில் குழந்தையிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்…

பின்னர் குழந்தை இறந்தது அவர்கள் இருவருக்கும் தெரியவர இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர்.நகர் போலீசார் எல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டரை மாத கைக்குழந்தையை அதன் தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லப்பனுக்கு துர்கா இரண்டாவது மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது…

நிருபர் வே.சரவணன்