Mon. Oct 7th, 2024

100 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி புகாரில் | கட்சி பிரமுகரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் |

ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக மோசடி புகார் | கட்சி பிரமுகர் கைது |

சென்னையில் 100 கோடி வங்கி கடன் வாங்கி தருவதாக ராஜஸ்தானை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபரை ஏமாற்றி பணம் பறித்த அரசியல் கட்சி பிரமுகர் முத்துவேல் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்..

சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகர் பகுதியை சேர்ந்த முத்துவேல் (45), லயன் முத்துவேல் என தனக்கு தானே பெயர் சூட்டிக் கொண்ட இவர் தற்போது மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். அரசியல் கட்சி ஒன்றில் வழக்கறிஞர் பிரிவு பகுதி துணை அமைப்பாளராக உள்ளதாகவும் லயன் முத்துவேல் அடிக்கடி பத்திரிகைகளில் நண்பர்கள் பெயரில் மெகா சைஸ் விளம்பர வாழ்த்து செய்திகளும் வெளிவருவதும் வில்லிவாக்கம், மற்றும் ராஜமங்கலம், கொளத்தூர், பகுதியில் கோயில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றாலும் இவர் பெயரில் பணம் கொட்டும் எனவும் மெட்ராஸ் படத்தில் வருவதுபோல சுவரில் கட்சி விளம்பரம் செய்யவும் இவரை தான் பார்க்க வேண்டுமாம், போயஸ் கார்டனில் அலுவலகம் வைத்து கட்டப் பஞ்சாயத்து மூலம் கோடி கணக்கில் வசூலில் ஈடுபட்டு வந்தார் என்றும் புகாரில் தெரிவிக்கின்றனர்..

போயஸ் கார்டனில் உள்ள பாபா எண்டர்பிரைசஸ், முத்துவேல் எண்டர்பிரைசஸ், வாராகி எண்டர்பிரைசஸ் என பல பெயர்களில் போலியாக நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்ததாகவும் இவரது ஆதரவாளர்களான அஜ்மல் மற்றும் வாசு என்கிற இரண்டு தரகர்கள் இவருக்கு வலது, இடதுமாக செயல்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இவரிடம் இருந்த ஐந்து சொகுசு கார்கள் மற்றும் தங்க நகைகள் உட்பட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும்.

கோடிக்கணக்கில் பணத்தேவை உள்ளவர்களை அணுகி அவர்களுக்கு எந்த விதத்திலும் சிக்கல் இல்லாமலும் ஆவணங்கள் இல்லாமலும் பல கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கித் தருவதாக கூறி முத்துவேலுவிடம் அழைத்து சென்றதும் அவர்களது கமிஷன் தொகையை பெற்று கொள்வது இவர்களது வழக்கம் என்றும் ராஜஸ்தானை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் நிகில் கண்ணா என்பவர், சென்னையில் தொழிலை தொடங்குவதற்கு வங்கி கடன் பெற முயன்று வரும் தகவல் தெரிந்ததும் அவருக்கு உதவுவதாக முத்துவேல் அணுகியுள்ளார். முத்துவேலுவின் போயஸ் தோட்டத்தில் உள்ள ஆடம்பரமான அலுவலகத்தை பார்த்து, தான் கேட்கும் 100 கோடி கடனை முத்துவேல் பெற்று தருவார் என நம்பிய தொழிலதிபர் நிகில் கண்ணாவிடம் கடனுக்கு உண்டான
சில ஆவணங்களை போலியாக காண்பித்து வங்கி கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறி, அதற்கான கமிஷன் தொகையாக 2.62 கோடியை பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளதாகவும் வங்கி கடனும் கிடைக்காமல், கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பிக் கேட்டபோது,தொழிலதிபர் நிகில் கண்ணாவை தனது அடியாட்கள் மூலம் மிரட்ட தொடங்கி உள்ளதால் அதிர்ச்சி ஈடைந்த நிகில் கண்ணா மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துவேலை சுற்றி வளைத்து கைது செய்தனர்..

மேலும் ஆந்திர மாநிலத்தில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் போலீசார் விசாரணை நடத்தியதில் இவருக்கு உடந்தையாக புரோக்கர்களாக செயல்பட்ட அம்ஜத்,வாசு இருவரையும் தேடி வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்…

நிருபர் வே.சரவணன்