Mon. Oct 7th, 2024

சென்னையில் ஆட்டோவை திருடிய வாலிபர் | சவாரிக்கு சென்ற போது கைது

சென்னை பூந்தமல்லி, ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (57). ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு, 100 அடி சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோ காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் ஆட்டோ நம்பரை வைத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை எடுத்து செல்வது போல தெரியவர இதையடுத்து ஆட்டோவை திருடிச் சென்ற நபர் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று கோயம்பேடு 100 அடி சாலையில் திருடு போனதாக கூறப்படும் ஆட்டோவை மர்ம நபர் ஓட்டிச் செல்வதாக வந்த தகவலையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர். மேலும் ஆட்டோவை ஓட்டி சென்ற சென்னை பழைய வண்ணார பேட்டையைச் சேர்ந்த முகமது பைரேஸ் (33), என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திருடிய ஆட்டோவில் சவாரி ஏற்றி ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ திருட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்