Mon. Oct 7th, 2024

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி |

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி |

சென்னை பி்ராட்வே சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவர் பழக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. மகள் மெர்சி (10), மகன் ஆலன் (8), அறநிலைய துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கனமழை காரணமாக இவர்கள் வசித்த வீட்டின் மேற்கூரை இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிறுவன் ஆலன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவனின் தாய் கலைவாணி, சகோதரி மெர்சி ஆகியோர் காயம் அடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமாக சண்முகராயன் தெருவில் 10க்கும் மேற்பட்ட பழமையான வீடுகள் உள்ளன. இவற்றை அறநிலையத்துறை முறையாக பராமரிப்பதில்லை. வீடுகளை புனரமைக்க அனுமதி கேட்டாலும் அறநிலையத்துறை தருவதில்லை என அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்…

இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்