Mon. Oct 7th, 2024

லாரியைக் கடத்த முயன்ற இருவர் கைது | ஒருவர் தலைமறைவு |

ஜூலை, 03, 2019

வேப்பேரி, சம்பத் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்த விலங்குத் தோல்களை, லாரியோடு கடத்த முயன்ற இருவரை… போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு, வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில், ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள, ஆடு மற்றும் மாட்டு தோலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நின்றுள்ளது. யாரும் இல்லாத நேரத்தில், மூன்று பேர் அந்த லாரியின் அருகே நின்று நோட்டமிட்டுள்ளனர். பின்னர், மூவரும் லாரியை திறப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த துப்புறவு பணியாளர்கள், சந்தேகமடைந்து, வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் லட்சுமணன், மதிவாணன், ஆசைத்தம்பி ஆகியோரைப் பார்த்த மூன்று திருடர்களும், இருசக்கர வாகனத்தில், தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இவர்களை துரத்திப் பிடிக்க முயன்ற போது… ஒருவர் தப்பித்துச் செல்ல, இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டேரியில், சாவி தொழில் செய்யும் செல்வம்(32) மற்றும் புழல் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான முகேஷ்(35) என்பதும், இவர்கள் மூவரும், தோல் ஏற்றி வந்த அந்த லாரியை, கடத்திச் செல்வதற்காக வந்ததும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய சையது என்ற நபரையும் தேடி வருகின்றனர்.

-நமது நிருபர்