Mon. Oct 7th, 2024

பாலியல் புகாரில் சிக்கி | அக்குப்பஞ்சர் மருத்துவர் கைது |

ஜூலை, 3 – 2019

தேனாம்பேட்டை அருகே அண்ணா சாலையில், மருத்துவமனையில் பணியாற்றிய துப்புறவுப் பணியாளரிடம் பாலியல் தொல்லைக் கொடுத்த, அக்குபஞ்சர் மருத்துவரை, போலீசார் கைது செய்தனர்.

அண்ணா சாலையில் உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வசித்து வருபவர் மருத்துவர் சபீர். இவர், தனது வீட்டிலேயே அக்குபஞ்சர் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில், துப்புறவுப்பணியாளராக பணியாற்றிய பெண்ணிடம், கடந்த 26 ம் தேதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தேனாம்பேட்டை, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், சபீர் மீது,
354 A – பெண்ணின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், பெண்ணின் அனுமதியில்லாமல் தொடுதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நிருபர் – கோகுலன்