Mon. Oct 7th, 2024

ஊழியர் சங்கத் தலைவர் பணி நீக்கம் | புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் |

ஜூலை , 2 , 2019

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பணி நீக்கத்தை எதிர்த்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தின், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் மதன்குமார் வரவேற்புரையாற்றினார். பாரதி, பிரான்ஸிஸ், துரை அரங்கசாமி, குமரேசன், நடராஜன், மலர் விழி , செல்வமன்னாள், ரெங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் எழுச்சியுரை ஆற்றினார். சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பழனிச்சாமி நன்றி கூறினார்…

  • நிருபர் பார்த்தசாரதி