Sun. Oct 6th, 2024

ஆந்திராவைச் சார்ந்த சூதாட்டம் படுஜோர் | ஆளும் கட்சி பிரமுகர் தொடர்பா? |

ஜூன் 16-2019..,

அரக்கோணம் பகுதியை சுற்றி நடுத்தர மக்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் வரை வசித்து வருகின்றனர். இதை ஒட்டிய பகுதியில் நெசவுத் தொழிலாளர்களும், விவசாயிகளும் உள்ளனர். குறிப்பாக அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த பங்காரப்பா, பாஸ்கர், மேலும் 4 நபர்கள் இவர்களுடன் அதிமுக பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் இங்கு சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. இதற்கு உதவியாக பல உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருந்து வருகின்றனர். நாள் ஒன்றிக்கு பல லட்சங்களை வைத்து சூதாட்டம் இங்கு நடைபெறுகிறது…

சூதாட்ட விடுதி நடத்தும் இடம்… அரக்கோணம் பகுதியில் இருந்து பங்காரம்மா கண்டிகை இடைப்பட்ட ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து… இடது பக்கம் செல்லும் ஏரிக்கரை ஓரமாக இந்த சூதாட்ட கிளப் நடைபெற்று வருகிறது. இது அனைவரும் அறிந்ததே..! ஆனால் அது அப்பகுதி காவல்துறைக்கு தெரியவில்லையா?ஆந்திராவை சேர்ந்த சூதாட்ட புலிகளுக்கு உதவி செய்வது கிராமிய காவல் துறையினராகவும் இருக்கலாம்?..

நேர்மையான வடக்கு மண்டல காவல் துறை தலைவர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்… பல மாதங்களாக இந்த சூதாட்ட விடுதி நடைபெற்று வருவதாகவும் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கையை முன் வைக்கின்றனர். காவல் நிலையத்திற்கு தினமும் பல ஆயிரம் ரூபாய் கப்பம் கட்டுவதாகவும் தகவல்.!?!
இப்பகுதியில் செயல்படும் சூதாட்ட விடுதி மூடப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை. இங்கு உள்ள பலர் இதுவரையில் இந்த சூதாட்ட விடுதியில் பல லட்சங்களை இழந்துள்ளார்கள். இந்த சூதாட்ட விடுதிக்கு ஆதரவாக முக்கிய அமைச்சரின் உதவியாளர் ஒருவர் புரோக்கராக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்