Mon. Oct 7th, 2024

வாகன சோதனையில் போலீசாரை பார்த்து ஓடிய | மூன்று சிறுவர்கள் கைது |

மே, 26-2019…,

சென்னை ஐ.சி.எப், வில்லிவாக்கம், அயனாவரம் ஆகிய இடங்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால்… குற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஐ.சி.எப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்களும் காவலர்களை பார்த்ததும்… இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

பின்பு ஐ.சி.எப் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் ஐ.சி.எப், வில்லிவாக்கம், பூந்தமல்லி, திருமுல்லைவாயில், திருவள்ளூர் ஆகிய இடங்களில் பூட்டை உடைத்து திருடியதை ஓப்புக் கொண்டனர். மேலும் இவர்கள் திருடிய பொருட்கள் அனைத்தும் இவர்களுடைய கூட்டாளிகளிடம் இருப்பதாக தெரிவித்ததாக போலீசாரிடம் கூறியதாகவும் தலைமறைவாக உள்ள இரு வாலிபர்களை பிடித்தால் தான் முழு விவரம் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்