Sun. Oct 6th, 2024

கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய பா.ஜ.க வினர்

மே 15-2019…,

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க வினர் மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார்

ஆலந்தூர், மே. 14
அரவங்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது… சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியமக்கள் நீதி மய்ய தலைவர் கமரஹாசன்.. பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் மீது நடவடிக்க எடுக்க கோரி பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் ஜி.குமார் தலைமையில் பாஜகவினர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் ” இந்நுக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாய தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது… சுதந்நிர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறி, அனைத்து இந்துக்களையும் தீவிரவாதியாக சித்தரித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் மீது.. பேச்சின் மூலம் வன்முறை தூண்டுதல், பிரிவினை வாதத்தை ஏற்படுத்துதல், இந்துக்கள் மனதை புண்படுத்துதல், இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் சட்ட பூர்வவமான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அதில் கூறியிருந்தனர். முன்னதாக பாஜகவினர் மேடவாக்கம் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கமலஹாசனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் பாஜக நிர்வாகிகள் இராம முத்துகுமார், சிவபாஸ்கர், சிபாஷ்குமார், வேல்முருகன், ஸ்ரீதர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

நமது நிருபர்