Mon. Oct 7th, 2024

கோயம்பேடு பஸ் நிலையத்தில் | பணிக்கு வந்த நடத்துனர் உயிரிழந்தார் |

மே, 14-2019…,

சென்னை, புதுக்பேட்டை தேற்கு கூவம் ரோடைச் சேர்ந்த கோபி (44). இவர் கோயம்பேடு பணிமுனையில் அரசு பஸ் நடத்துனராக பணிபுரிகிறார். இன்று அதிகாலை 3 மணி அளவில் பணிக்கு வந்த நடத்துனர் கோபி… அவரது ரூமில் ஓய்வெடுக்க படுத்து இருந்தார். பின்பு கோபி வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் படுத்து இருந்ததை அருகில் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து 108 வாகனத்துக்கு தொலைபேசி மூலமாக தகவல் சொன்னார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்… கோபியை பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டார் என்று கூறினார். பின்பு கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைகாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்