Mon. Oct 7th, 2024

குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞர் கைது | மூவரில் இருவர் பலி |

மே, 3 – 2019

வில்லிவாக்கத்தில் குடிபோதையில் வாகனத்தை வேகமாக ஓட்டி மூன்று பேர் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் படுகாயம் குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி காவல் துறையிடம் ஒப்படைத்தனர் காருக்குள் இருந்த
2 பேர் தப்பி ஓட்டம். ஒருவர் கைது.

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்திய நகர் பாடி மேம்பாலம் கீழ் இன்று காலை 8:15 மணி அளவில் குடிபோதையில் இன்னோவா காரை வேகமாக ஓட்டி வந்து டிரான்ஸ்பார்ம் கம்பத்தில் மோதியது அருகில் உள்ள டீ கடையில் அமர்ந்து இருந்த அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த சரசா/65, ஆதிலட்சுமி/50, மோகன்/40 ஆகியோர் கார் பக்கத்தில் சென்று பார்க்கும் போது தீடீர் என்று கார் பின்னால் வேகமாக வந்ததில் பெண் சரசா மீது மோதி சரசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அருகில் இருந்த பெண் ஆதிலட்சுமி, மோகன் மீது மோதியதில் ஆதிலட்சுமி தூக்கி வீசப்பட்டு கால் முறிந்தது மோகன் என்பவருக்கு பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடினார் காருக்குள் இருந்த தேவேந்திரன் என்பவரை பொதுமக்கள் சிறை பிடித்தனர் மேலும் காரில் இருந்த 2 பேர் தப்பி ஓட்டம் தேவேந்திரனை அப்பகுதி மக்கள் சரமாரியாக அடித்து வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மோகனை சேர்த்தனர் ஆனால் மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்கு போலீசார் போதையில் கார் ஓட்டி வந்த தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காரையும் பறிமுதல் செய்தனர்.

நமது நிருபர்