Mon. Oct 7th, 2024

உடுக்கை அடிக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை..!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் குடிபோதை தகராறு காரணமாக உடுக்கை அடிக்கும் தொழில் செய்து வந்த குப்புசாமி (30) கத்தியால் குத்திக் கொலை. ஆட்டோ ஓட்டுநர் வெங்கடசனை கத்தியால் குத்த குப்புசாமி வந்ததாகவும் அப்போது வெங்கடேசன் கத்தியை பிடுங்கி குப்புசாமியை ஒரே குத்தில் கொலை செய்ததாகவும் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்…

இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வெங்கடேசனை வியாசர்பாடி போலீசார் தேடி வருகின்றனர்…