Mon. Oct 7th, 2024

கார் கண்ணாடியை உடைத்து பொருட்களை | திருடும் இருவர் கைது |

கார் கண்ணாடியை உடைத்து பொருட்களை | திருடும் இருவர் கைது |

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று சென்னை நீலாங்கரை பகுதியில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ஒரு விலை உயர்ந்த மடிக்கணினியை ( Laptop ) ஒன்றை அடையாளம் தெரியாத சிலர் திருடி சென்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்த ரூ.10 லட்சத்தை திருடி சென்றாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவொற்றியூரை சேர்ந்த நரேஷ்/34 என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அளித்த தகவலின் படி சென்னை ராஜமங்களத்தை சேர்ந்த பிரசாந்த்/24 என்பவரை கைது செய்தனர்.

பிடிப்பட்ட இரு குற்றவாளிகளிடம் இருந்து 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர் மேலும் இந்த சம்பவத்தில் மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்…

நிருபர் ராம்