Sun. Oct 6th, 2024

சிகிச்சைக்கு வருபவர்களை ஏமாற்றி பணம், நகைகளை | திருடிய பெண்மணி கைது |

சிகிச்சைக்கு வருபவர்களை ஏமாற்றி பணம், நகைகளை திருடிய | பெண்மணி கைது |

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் நோயாளிகளை ஏமாற்றி பணம், நகை பறித்த பெண்ணை பொதுமக்கள் சராமாரியாக அடித்து அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் வெளி மாவட்டங்கள் மற்றும் சென்னை முழுவதிலும் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர் இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சியை சேர்ந்த சின்னப்பொன்னு /85 என்ற மூதாட்டியிடம் நூதன முறையில் 1/2 சவரன் கம்மலை ஒரு பெண் கழட்டி சென்றுள்ளார். அதே போல மயிலாடுதுறையை சேர்ந்த மணிமேகலை /50 என்பவரிடம் 600 ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளார் அதே போல் மதுரையை சேர்ந்த மேரி /69 என்பவரிடம் 1000 ரூபாய் பறித்து சென்றுள்ளார்.

அதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அந்த பெண்மணியை தர்ம அடிக்கொடுத்து கட்டிவைத்து அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் உடனடியாக அங்கு வந்த அமைந்தகரை போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தினமும் 500 மேற்பட்ட புறநோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலையில் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படவில்லை என்றும், இது போல பலமுறை குற்ற சம்பவங்கள் மற்றும் தமது உடமைகளை இழந்துள்ளதாக அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்