Mon. Oct 7th, 2024

வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறி | உரிமையாளர் கழுத்தறுத்து நகை பறிப்பு |

வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறி வீட்டின் உரிமையாளரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி ஓட்டம் கோவையில் பயங்கரம்…

கடந்த 18ம் தேதி அன்று கோவை செளவ்ரி பாளையம் அன்னை வேளாங்கன்னி நகரில் வீடு வாடகைக்கு பார்ப்பதாக கூறி கணவன் மனைவி போல் நடித்து ஏமாற்றி வீட்டில் இருந்து வீட்டின் உரிமையாளரான ஏஞ்ஜலின் மேரி/70 என்பவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு அவரது கழுத்தில் இருந்து சுமார் 6 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளையும் திருடி சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து இவ்வழக்கில் தொடர்புடைய இரு குற்றவாளிகளை தேடினர்.

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களையும் அருகில் உள்ளவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து கோவை பாரதி நகர் சூலூரை சேர்ந்த ரமேஷ்/36 என்ற குற்றவாளியையும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குற்றவாளியின் கள்ளக்காதலியான காஞ்சனா தேவி/35 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பு இருந்ததாகவும் உள்ளாச வாழ்க்கை வாழ்வதற்கு இது போன்ற செயலில் ஈடுப்பட்டதாக இருவருமே ஒப்புகொண்டனர்.

இருவரிடமிருந்து திருடிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்…

நிருபர் வெ.ராம்