Mon. Oct 7th, 2024

மகளைக் காணவில்லை என புகார் அளித்தும் |கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரி|

சென்னை அமைந்தகரையில் பள்ளி மாணவி கடத்தல் பெற்றோர் குமுறல் கடத்தப்பட்ட மாணவியை தேடுவதற்கு போலீசார் மெத்தனம்.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் கவியரசன்(40), ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவரது மகள் அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 15ம் தேதி அன்று மதியம் 12 மணி அளவில் பள்ளியின் அருகே தனது தாயாரிடம் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.

இது தொடர்பாக கவியரசன் கடந்த 15ம் தேதி அன்று அமைந்தகரை போலீஸ்
நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஜாகிர் என்ற நபர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் 12 நாள் ஆகியும் பள்ளி மாணவியை தேடாமல் மெத்தன போக்கில் இருந்து வருகின்றனர்.

பள்ளி மாணவி கடத்தப்பட்ட வாலிபருடன் பெங்களூரில் இருப்பதாக பெற்றோர் உதவி ஆய்வாளர் சிவசங்கரிடம் சொன்னால் அது எல்லாம் எங்களுக்கு தெரியும் என்று சொல்லி பாதிக்கப்பட்டவர்களை விரட்டி அடித்தார்.

மனம் உடைந்து போன பெற்றோர்கள் எங்கே போவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அமைந்தகரை காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்கச் சென்றால் அங்குள்ள உதவி ஆய்வாளர் சிவசங்கர் சரியாக விசாரிக்காமல் அவதூறாக பேசுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு…

நமது நிருபர்