Sun. Oct 6th, 2024

தொடர்ந்து களங்கப்பட்டு வருகிறது சென்னை காவல்துறை…!!!

ஜாக்டோ ஜியோ-வின் 41 தலைவர்களை சிறையிலடைக்க நடுவர் நீதிமன்றம் மறுப்பு

காவல்துறை அலுவலர்களை தாக்கியதாக பொய்வழக்கு புனைந்து இரவு 12.15 மணியளவில், கல்மண்டபத்தில் உள்ள  14வது எழும்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் தலைவர்களை நேர்நிறுத்தினர்.

வழக்கிற்கான முகாந்திரம் ஏதுமில்லை எனவும் சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்றும் கூறி தனிநபர் பிணையில் விடுவித்து அனைத்து தலைவர்களையும் இரவு 1.30 மணியளவில் நீதிபதி விடுவித்தார்.

என்று சொந்த ஊழியர்கள் மீது கோழைத்தனமாக பொய் வழக்குகளை புனைவதை கைவிட்டு, நேர்மையான தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுக்குமா தமிழக அரசு..?

நியாயமான கோரிக்கைகளை பேசித்தீர்க்காமல் காவல்துறையை ஏவி பொய்வழக்கு புனைந்து போராட்டத்தை ஒடுக்க நினைத்த தமிழக அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது