Fri. Jul 5th, 2024

மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா : மணமேல்குடியில் மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மாமன்னர் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அகமுடையார் நலச்சங்கத்தினரால் மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

மாட்டுவண்டிகள் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக் குதித்து, இலக்கை நோக்கி,ஒன்றையொன்று‌ முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

போட்டியைக்காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி ஜோடிகளையும், அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும் இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூபாய் 4 லட்சம் ரொக்கப் பரிசும், சிறப்பு பரிசுகள், தட்டு வண்டி, எல்இடி டிவி, பிரிட்ஜ் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் மணமேல்குடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை