Mon. Jul 8th, 2024

மீண்டும் ஒடிசாவில் ரயிலில் தீ விபத்து!

ஒடிசாவின் பூரியில் உள்ள கோச்சிங் ரயில் நிலையத்தில் தீ விபத்தில் ஏற்பட்டதில் ரயில் பெட்டி பலத்த சேதமடைந்தது.

இன்று மதியம் 12.30 மணியளவில் ரயில் துப்புரவுப் பணிகளுக்காக வாஷிங் லைனில் இருந்தபோது ரயில் பெட்டியின் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நல்லவேளையாக இந்த தீ விபத்தில் ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.