Mon. Jul 8th, 2024

புதுக்கோட்டையில் மெகா பட்டாசுக் கடையை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்!

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை
பண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து, முதல் விற்பனையினை
துவக்கி வைத்தார்.

எம்.எம்.16, புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.

பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த விற்பனை பண்டகசாலை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி CMS, TVS கூட்டுறவு பண்டகசாலை ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இந்தாண்டு தீபாவளிக்கு AYYAN, STANDARD, WE TWO, ANIL ஆகிய நிறுவனங்களின் புதிய தயாரிப்பு பட்டாசு வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு ரூ.80 இலட்சம் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு பட்டாசு விற்பனை இலக்கு ரூ.1 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையில் தரமான பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்
எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைபித்தன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை