கடலூரில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடலுக்கு மருத்துவ மரியாதை!
![](https://www.peranmai.com/wp-content/uploads/2023/11/New-Project-2023-11-02T132518.586.jpg)
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த, கடலூரைச் சேர்ந்த மாயவன் என்பவரின் உடலுக்கு மருத்துவர்கள் மரியாதை செலுத்தினர்.
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த, கடலூரைச் சேர்ந்த மாயவன் என்பவரின் உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைவுக்குப் பின் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.