Mon. Jul 8th, 2024

காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முடியாது – ரஷ்ய அதிபர் புதின்!

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது.

இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை கைவிடுமாறு பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து இன்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முடியாது என்றார்.