Sun. Oct 6th, 2024

பிரசாரத்திற்கு சென்ற தெலுங்கானா எம்.பிக்கு கத்தி குத்து – ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி!

தெலுங்கானா மாநில சூரம்பள்ளி என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்.பி. கோதாபிரபாகரை, கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கத்தியால் குத்திய நபர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.