Sun. Oct 6th, 2024

சுயநினைவை இழந்த பாம்புக்கு தன் மூச்சை செலுத்தி உயிர் கொடுத்த காவலர்!

மத்திய பிரதேசத்தில் சுயநினைவை இழந்த பாம்புக்கு தன் மூச்சை செலுத்தி காவலர் ஒருவர் உயிர் கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மத்திய பிரதேசம் நர்மதாபுரத்தில் பூச்சிக்கொல்லி கலந்த தண்ணீரை குடித்த பாம்பு ஒன்று சுயநினைவு இழந்தது.

அப்போது அங்கு வந்த காவலர் ஒருவரை அந்தப் பாம்பைப் பார்த்ததும், CPR கொடுத்து உயிரை காப்பாற்றினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து அந்த காவலரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.