Sun. Oct 6th, 2024

பெட்ரோல் குண்டு வீச்சு… ஆளுநர் மாளிகை மீது விழவில்லை – காவல்துறை விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக, பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி சுருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், 2 பெட்ரோல் கண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றதாகவும், ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயிலில் பலத்த சேதம் அடைந்ததாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், தாக்குதல் நடத்த வந்தவர்கள் ஒரு பெட்ரோல் பாட்டிலை வீசினார். பாட்டில் ஆளுநர் மாளிகை மீது விழவில்லை. ஆளுநர் மாளிகை கேட் அருகே உள்ள சாலை தடுப்புகள் மீது தான் விழுந்தது. எந்த சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.