Mon. Jul 8th, 2024

ஆளுநருக்கு அக்கறையில்லை – அமைச்சர் பொன்முடி கண்டனம்

தமிழக ஆளுநருக்கு அக்கறை இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு அக்கறை இல்லை. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பது ஏன்? சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கும் ஆவணத்தில் ஆளுநர் கையெடுத்திட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் கல்லூரி படிப்பை இழந்து 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார். ன்ம் தெரி அமைச்சர் பொன்முடி