Sun. Oct 6th, 2024

குட் நியூஸ்…. அரசு ஊழியர்களுக்கு D.A. 4% உயர்வு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படியை, 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், வரும் 2023 ஜூலை 1ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.