Mon. Jul 8th, 2024

ஜார்க்கண்ட்டில் கொடூரம்: எருமை மாட்டிற்காக சிறுவனை கொலை செய்த கிராம மக்கள்!

ஜார்க்கண்ட்டில் எருமை மாட்டிற்காக கிராம மக்கள் சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், தாதி கிராமத்தில் சாலையில் திரிந்த எருமை மாட்டின் மீது சைக்கிள் மோதிய விவகாரத்தில், 16 வயது சிறுவனை ஓட, ஓட கிராம மக்கள் விரட்டிச் சென்று அவனை கொடூரமாக தாக்கி அடித்தே கொலை செய்துள்ளனர்.

அந்த எருமை மாட்டிற்கு இழப்பீடு தருவதாக கூறியும், ஈவு இரக்கமின்றி 4 பேர் சேர்ந்து அந்த சிறுவனை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அச்சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எருமை மாட்டிற்காக ஒரு அப்பாவி சிறுவனை அடித்தே கொலை செய்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.