Sun. Oct 6th, 2024

இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது – பயணிகள் அதிர்ச்சி!

அதிக கட்டணம் வசூல் செய்ததாலும், வெளி மாநிலங்களிலிருந்து பதிவு செய்து இங்கு இயக்கப்படுவதாலும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்தனர்.

இன்று மாலை ஆம்னி பஸ்கள் ஓடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதால், 120 பேருந்துகளை சிறைபிடித்ததை விடுவிக்க வேண்டும் என்று தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.