Mon. Jul 8th, 2024

இயக்குநர் ஹரியின் தந்தை உயிரிழந்தார்!

தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் (88) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஹரி. இவர் தமிழில் ‘சாமி’, ‘கோவில்’, ‘ஆறு’, ‘தாமிரபரணி’, ‘சிங்கம்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது நடிகர் விஷாலை வைத்து 34வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.