Mon. Jul 8th, 2024

கொடூரத்தின் உச்சம் : காசா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் – 500 பேர் பலி!

காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனை மீது நேற்று இரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் 500 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக தெரிவித்திருக்கிறார்.

காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 500 அப்பாவி மக்கள், நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.