Mon. Jul 8th, 2024

லியோ படத்திற்கு 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது.

இந்த அவசர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

லியோ திரைப்பட காட்சிகள் அனுமதி தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஏன் வழக்கு தொடரவில்லை? என்று பட நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, ‘லியோ’ படத்தின் ரசிகர்களுக்கான 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்ற பட நிறுவனத்தின் கோரிக்கை ஏற்க முடியாது என்றார்.