Sun. Oct 6th, 2024

புதுக்கோட்டை பல திருக்கோயில்களில் கொலு பூஜைகள்!

புதுக்கோட்டை நகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு திருக்கோயில்களில் கொலு வைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

நவராத்திரி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு திருக்கோயில்களில் கொலு வைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன

தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகின்றது.புதுக்கோட்டை நகரில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது.

நவராத்திரி 9 நாட்களும் வெவ்வேறு பிரசாதங்கள் கடவுளுக்கு படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ண மயமான, வித்தியாசமான கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன்கோவிலில் அமாவாசைதினத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆர்வமுடன் வருகை தந்து அரியநாச்சி அம்மனை வணங்கி நவராத்திரி கொலுவை கண்டு களித்தனர்.

விநாயகர்,முருகன் மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தெட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர்மேலும் ராமர், சீதை, வயதான தாத்தா, பாட்டி பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் பாடசாலை திருமணக்கோலம்வளைகாப்பு இதேபோன்று தலைவர்களின் உருவ பொம்மைகளும்.

கொலுவில் இடம்பெற்றுள்ளன.அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் கோயில் திருக்கோகர்ணம் அருள்மிகு பிரஹதாம்பாள் திருக்கோயில். அருள்மிகு சாந்தநாத சுவாமி திருக்கோயில்.அருள்மிகு அரியநாச்சியம்மன் திருக்கோயில். அருள்மிகு மனோன்மணி அம்மன் திருக்கோயில்.

சின்னப்பாநகர் அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்.தெற்கு ராஜ வீதி அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில்.மேலராஜவீதி அருள்மிகு நைனா ராஜு தண்டாயுதபாணி திருக்கோயில்.. சங்கரமடம். ஆகிய இடங்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அமானுல்லா புதுக்கோட்டை