Mon. Jul 8th, 2024

மக்களே வெளியேறுங்கள்… – இஸ்ரேஸ் அதிரடி அறிவிப்பு!

கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகள், உடைகள் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், லெபனான் எல்லையில் உள்ள 28 சமூகங்களைச் சேர்ந்த மக்களை வெளியேற்றும் திட்டத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது,

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் மோதல் குறித்து, லெப்டினன்ட் கர்னல் பீட்டர் லெர்னர் கூறுகையில்,

“இஸ்ரேலின் சில சமூகங்களில் பாதுகாப்பு குறித்த கவலைகள் இன்னும் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 3 நிகழ்வுகள் நடந்துள்ளன. காசா பகுதியின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மக்கள் நகர்ந்து செல்ல அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.