Mon. Jul 8th, 2024

“அறநிலையத்துறையில்தான் கொள்ளை நடக்குது” – அண்ணாமலை பேச்ச!

அறநிலையத்துறையில்தான் மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற 3ம் கட்ட பாதயாத்திரையை தொடங்கினார்.

அப்போது, அவிநாசியில் பாதயாத்திரையின்போது அண்ணாமலை பேசுகையில்,

தமிழகத்தில் மிகப் பெரிய கொள்ளையே அறநிலையத்துறையில்தான் நடக்கிறது. 33% இடஒதுக்கீடு முதல் தலைமுறை பெண்களுக்கானது. அரசியல் தலைவர்களின் குடும்பத்துக்கானது அல்ல. இருப்பைக்காட்டிக் கொள்ளவே மகளிர் உரிமை மாநாட்டை கனிமொழி நடத்தியுள்ளார்.

மத்திய அரசை குறை சொல்வதை மட்டுமே திமுக முழு நேர வேலையாக வைத்துள்ளது என்றார்.