Sat. Jul 20th, 2024

‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்..’ என்று சொல்லிக்கொண்டே நழுவிய அமைச்சர் எல்.முருகன்!

சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சில பொறுப்பற்ற சம்பவங்கள் நடந்தது. இந்திய ரசிகர்கள் பலரும் முகமது ரிஸ்வான் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, ஜெய் ஸ்ரீராம் என மத ரீதியிலான கோஷம் எழுப்பினார்கள்.

இச்செயல் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ 3ம் கட்ட நடைபயணத்தை தொடங்கினார்.

இதில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் நடந்து முடிந்த இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என்று இந்திய மக்கள் மத ரீதியாக கோஷங்கள் எழுப்பினார்களே அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர்.

அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ச்சியாக கூறிக்கொண்டே அமைச்சர் எல்.முருகன் நகர்ந்தார்.