Mon. Jul 8th, 2024

காஸாவில் இணைய சேவையை இஸ்ரேஸ் முடக்கியது – மக்கள் தவிப்பு!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து வருகிறது.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அங்கு பதற்றட்டமான சூழ்நிலைக்கிடையில், காஸா பகுதியிலிருந்து அப்பாவி மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் மீதான தாக்குதல் தீவிமடைந்துள்ள நிலையில், காஸாவில் இணைய சேவையை இஸ்ரேல் முடக்கியுள்ளது.

தொலைத்தொடர்பு கருவிகளை அழித்ததால், 20 லட்சம் பேர் இணைய சேவையின்றி தவித்து வருகின்றனர்.