Fri. Jul 5th, 2024

புதுக்கோட்டையில் நகை திருடு போன வழக்குகளில் குற்றவாளி அதிரடி கைது!

பொன்னமராவதி உட்கோட்டப் பகுதிகளில் நகை திருடு போன வழக்குகளில் குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து 41 சவரன் நகைகள் மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் செட்டியார் தெருவில்
உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 17.09.23-ம் தேதி நகை திருடு போய்விட்டது. அதேபோல் கடந்த 29.06.23-ம் தேதி கீழாநிலைகோட்டை அரியநாயகி அம்மன் கோவில்
கும்பாபிஷேகத்தில் நகை காணாமல் போய்விட்டது.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரனண முடிவில் மேற்கண்ட நகை கானாமல் போன இரு வழக்குகளில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா,நச்சாந்துபட்டி அருகே மலையலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் மகன் கார்த்திக் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியான
கார்த்திக் என்பவரை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்து அவரிடமிருந்து 41 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேற்படி குற்றவாளியை விரைவாக பிடிக்க உதவியாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரடியாக அழைத்து
வெகுவாக பாராட்டினார்.

அமானுல்லா, புதுக்கோட்டை