Mon. Jul 8th, 2024

இஸ்ரேலுக்கும்-ஹமாஸுக்கும் இடையே பங்கர போர் மோதல் – பற்றி எரியும் நகரங்கள்!

இஸ்ரேலுக்கும்-ஹமாஸுக்கும் இடையே பங்கர போர் மோதலால் பல நகரங்கள் பற்றி எரிந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போரில் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் கேட்கின்றன.

இந்நிலையில், இன்று ஹமாஸ் ஊடுருவலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தற்போது கடுமையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது,

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.