Mon. Jul 8th, 2024

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ஜிம் டிரெய்னர் மயங்கி விழுந்து மரணம்!

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜிம் டிரெய்னராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. மேலும், இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக சில நாட்களாக தீவிர உடற்பயிற்சில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கொரடூரில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து அவர் குளியறைக்கு சென்றுள்ளார். அங்கு நீண்டநேரம் வெளியே வராததால் இங்கிருந்தவர்கள் குளியறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்திருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், ஜிம் டிரெய்னர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.