Sun. Oct 6th, 2024

அணையை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம் – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கலகல…

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூடியது. காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட முல்லை பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும். அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். எனவே, கவலைப்பட வேண்டாம் என்று பேசும்போது சட்டப்பேரவையில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் சிரித்துவிட்டனர்.