Sun. Oct 6th, 2024

இஸ்ரேல் மீது ஹமாஸ் படை பயங்கர தாக்குதல் – மேயர் படுகொலை!

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுக் காலமாக மோதல் நிலவி வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகிறது.

பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இன்று இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.

காசாவில் 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுக்களை இஸ்ரேல் மீது ஏவியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது இஸ்ரேல் பதிலுக்கு தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் என்ற மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மேலும் இஸ்ரேலுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 35 இஸ்ரேல் வீரர்களை ஹமாஸ் படை கைப்பற்றியுள்ளது.

இது தொடர்பாக தனது சமூகவலைத்தளத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட பதிவில், ‘நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.