Mon. Jul 8th, 2024

கோயில்கள் சுரண்டப்படுவதாக பிரதமர் கூறியது மிகச்சரியானது – அண்ணாமலை

தமிழக அரசின் பிடியில் கோயில்கள் சுரண்டப்படுவதாக பிரதமர் பேசியது மிகச் சரியே என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக அரசின் பிடியில் கோயில்கள் சுரண்டப்படுவதாக பிரதமர் பேசியதுமிகச் சரியே. கோயில்கள் வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடமல்ல. கோயில் செல்வத்தை கொள்ளையடிப்பது மட்டுமே இவர்களின் நோக்கம். கடந்த 2 ஆண்டுகளில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கையை தமிழக மக்களுக்கு வெளிப்படையாக கூற முன் வருவார்களா? அரசின் பிடியிலிருந்து கோயில்களை மீட்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.