Mon. Jul 8th, 2024

ஷுப்மன் கில்லுக்கு டெங்கு – ஷாக்கான ரசிகர்கள்!

நேற்று 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 83.10 கோடியாகும். இத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன், பரிசாக ரூ.33.24 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 16.61 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையும் இரு அணிக்கு தலா ரூ.6.65 கோடி வழங்கப்படும்.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதி கொண்டன.

இந்த முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து வீழ்த்தியது.

இந்திய – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. ஆதலால் அவர் இப்போட்டியில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.